செய்திகள்

ஈரான் - ஈராக் எல்லையில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டரில் 7.2 ஆக பதிவு

Published On 2017-11-12 20:13 GMT   |   Update On 2017-11-12 20:13 GMT
ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் நேற்றிரவு 7.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்படலாம் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News