செய்திகள்

ஆப்கானிஸ்தான்: ராணுவ அகாடமியில் தற்கொலைப்படை தாக்குதல் - 15 பேர் பலி

Published On 2017-10-21 13:33 GMT   |   Update On 2017-10-21 13:33 GMT
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ராணுவ அகாடமியில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 15 பயிற்சி அதிகாரிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் மார்ஷல் பாஹிம் ராணுவ அகடாமி உள்ளது. இதில், அந்நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ள வீரர்கள் அதிகமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை அகடாமியின் வாயில் அருகே பயிற்சி அதிகாரிகள் இருந்த பேருந்து வந்து கொண்டிருந்த போது தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இந்த தாக்குதலில் 15 பயிற்சி அதிகாரிகள் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கம் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

ஏற்கனவே, கடந்த 24 மணி நேரத்தில் காபுல் நகரில் இரண்டு இடங்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News