செய்திகள்

பப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

Published On 2017-09-26 00:35 GMT   |   Update On 2017-09-26 00:35 GMT
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
லண்டன்:  

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான பி.எம்.ஜி. தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 5.7 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 6.0 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News