என் மலர்
நீங்கள் தேடியது "magnitude"
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #Sichuan #EarthQuake
பீஜிங்:
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.
பின்னர் அவர்கள் வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். டோங்கே என்கிற கிராமத்தில் நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்தன.
அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை. #Sichuan #EarthQuake
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.
பின்னர் அவர்கள் வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். டோங்கே என்கிற கிராமத்தில் நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்தன.
அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை. #Sichuan #EarthQuake
இமயமலைப் பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #Himalaya #Earthquake #Magnitude #Scientist
புதுடெல்லி:
பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலக்கடுக்கம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், கூறுகையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கம் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதி படுத்தும் விதமாக கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோளும் எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
எச்சரிக்கையின்படி நிலநடுக்கும் ஏற்பட்டால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்படக்கூடிய இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் வரையில் இருக்கும். #Himalaya #Earthquake #Magnitude #Scientist
பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலக்கடுக்கம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், கூறுகையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கம் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதி படுத்தும் விதமாக கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோளும் எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
எச்சரிக்கையின்படி நிலநடுக்கும் ஏற்பட்டால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்படக்கூடிய இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் வரையில் இருக்கும். #Himalaya #Earthquake #Magnitude #Scientist
ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது. #Earthquake #Russia #Kamchatka
விளாடிவோஸ்டாக்:
ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.
காம்சாத்கா விரிகுடா பகுதியில் 76.2 கி.மீ. ஆழத்தில் அந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நில நடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீதிகளில் வந்து தஞ்சம் அடைந்தனர்.
காம்சாத்கா தீபகற்பத்தில் பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
மேலும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என ரஷிய நெருக்கடி கால சூழல்கள் அமைச்சக வட்டாரங்கள் கூறின. #Earthquake #Russia #Kamchatka
ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.
காம்சாத்கா விரிகுடா பகுதியில் 76.2 கி.மீ. ஆழத்தில் அந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நில நடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீதிகளில் வந்து தஞ்சம் அடைந்தனர்.
காம்சாத்கா தீபகற்பத்தில் பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
மேலும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என ரஷிய நெருக்கடி கால சூழல்கள் அமைச்சக வட்டாரங்கள் கூறின. #Earthquake #Russia #Kamchatka