செய்திகள்

பாகிஸ்தான்: சாலையோர குண்டு வெடிப்பில் 6 பேர் பலி

Published On 2017-09-17 11:43 GMT   |   Update On 2017-09-17 11:43 GMT
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதியில் இன்று சாலையோரத்தில் கிடந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதியில் இன்று சாலையோரத்தில் கிடந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதியான பழங்குடியினர் அதிகம் வாழும் தெஹ்சில் மாமோன்ட் அருகே பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டாங்கி என்ற இடத்தில் சாலையோரத்தில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில்  பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
Tags:    

Similar News