செய்திகள்

விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்த ஆசாமிக்கு 18 ஆண்டுகள் சிறை: இங்கிலாந்து கோர்ட் அதிரடி

Published On 2017-08-23 22:10 GMT   |   Update On 2017-08-23 22:10 GMT
விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டுடன் சிக்கிய ஆசாமிக்கு, 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டது.
லண்டன்:

பாகிஸ்தானில் பிறந்தவர் நசீம் முகமது (43). இத்தாலி குடியுரிமை பெற்ற இவர் ஜனவரி 30-ஆம் தேதி இத்தாலியில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் வந்திறங்கினார்.

விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அவரது பொருள்களை சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் சிறிய டியூப் ஒன்றில் வெடிமருந்து நிரப்பப்பட்டதும், பேட்டரிகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு மான்செஸ்டர் நகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதில், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு பைப் வெடிகுண்டுகள் கொண்டு வந்த முகமதுவுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டன விதிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.
Tags:    

Similar News