செய்திகள்

டோங்கா தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

Published On 2017-08-19 03:57 GMT   |   Update On 2017-08-19 03:57 GMT
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவின் மேற்கு பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர்:

பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு டோங்கா. இன்று அதிகாலை அந்த நாட்டின் மேற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பூமி குலுங்கியது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்து அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், இந்த நிலநடுக்கம் சுமார் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் இது உருவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News