செய்திகள்
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவோ தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவோ தீவில் சுமார் 6 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் கிழக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 34 கிலோமீட்டர் தூரத்திலும், கடலுக்கு அடியே சுமார் 74 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாக பதிவானது.
இந்த திடீர் நிலடுக்கத்தால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவோ தீவில் சுமார் 6 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் கிழக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 34 கிலோமீட்டர் தூரத்திலும், கடலுக்கு அடியே சுமார் 74 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாக பதிவானது.
இந்த திடீர் நிலடுக்கத்தால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.