செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 70 கிராமவாசிகள் கடத்தல் - 7 பேர் கொலை

Published On 2017-07-22 23:30 GMT   |   Update On 2017-07-22 23:30 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹர் மாகாணத்தில் 70 கிராமவாசிகள் கடத்தப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள காந்தஹர் மாகாணத்தில் 70 கிராமவாசிகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர்.

தலிபான்கள் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஆப்கான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி கூறுகையில், “காந்தஹார்-தரின்கோட் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமத்தில் இருந்து 70 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை” என்றார்.

காபூல் மற்றும் காந்தஹார் மனித உரிமை அமைப்புகள் இந்த கடத்தல் சம்பவத்தை உறுதி செய்துள்ளது.
Tags:    

Similar News