செய்திகள்

லண்டனில் இந்தியர் அடித்துக்கொலை: துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு

Published On 2017-06-03 06:09 GMT   |   Update On 2017-06-03 06:09 GMT
லண்டனில் இந்தியர் அடித்துக்கொலை, கொலையாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் சத்னம்சிங் (45). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கட்டுமான தொழில் செய்து வந்தார்.

சம்பவத்தன்று தென் மேற்கு லண்டனில் உள்ள ஹாயெஸ் பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நில்வர் நிற கார் வந்து நின்றது.

அதில் இருந்து ஒரு மர்ம நபர் இறங்கினர். அவன் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பேஸ் பந்து மட்டையில் சத்னம்சிங்கை சரமாரியாக தாக்கி விட்டு காரில் தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சதனம்சிங்கை கொலை செய்த மர்ம நபர் யார்? எதற்காக இக்கொலை நடந்தது என தெரிய வில்லை. எனவே கொலையாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News