செய்திகள்

நேபாளத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 வயது மகளை கழுத்தை நெறித்து கொன்று, தற்கொலைக்கு முயன்ற இந்தியர்

Published On 2017-04-30 14:48 GMT   |   Update On 2017-04-30 14:48 GMT
நேபாளத்தில் இந்தியர் ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 வயது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காத்மாண்டு:

இந்தியாவைச் சேர்ந்த ராஜூ சவுதரி என்பவர் நேபாளத்தில் உள்ள இலாம் பகுதியில் புட் ஸ்டால் வைத்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபித்துக்கொண்டு சவுதரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள தி பிரண்ட் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அப்போது மனைவி மீதான கோபத்தால் தனது 8 வயது மூத்த மகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது 3 வயதான 2-வது குழந்தையின் கழுத்தையும் நெறித்துள்ளார்.

அந்த குழந்தை மயக்கம் அடைய, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் ரூமில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது பேன் முறிந்து விழுந்தது. இதனால் கிழே விழுந்த சவுதரிக்கு பயங்கரமாக காயம் ஏற்பட்டது.

இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் முதலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரு குழந்தை இறந்த நிலையிலும், ஒரு குழந்தை மயக்கத்திலும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அளித்தனர்.

வலியால் துடித்த சவுதரியை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News