search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian man"

    • பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்தது தான் சாதனையாக இருந்தது.
    • சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரஷித்தின் சாதனையை தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார்.

    கின்னஸ் சாதனை படைப்பதற்காக இளைஞர்கள் பலரும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பருப்பு வகைகளில் ஒன்றான வால்நட்களை தலையிலேயே உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

    வால்நட்டின் மேல் ஓட்டை உடைப்பது கடினமான நிலையில் ஒரு நிமிடத்தில் 273 வால்நட்களை தலையில் உடைத்து ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவீன் குமார் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    தற்காப்பு கலைஞரான இவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தலையிலேயே வால்நட்டை உடைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்தது தான் சாதனையாக இருந்தது. 2017-ம் ஆண்டு இந்த சாதனையை அவர் படைத்திருந்தார்.

    இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரஷித்தின் சாதனையை தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார். இவர் தலையில் வால்நட்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த வீடியோவை உலக கின்னஸ் சாதனை அமைப்பில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட நவீன்குமார் ஒரு நிமிடத்தில் 273 வால்நட்களை உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளது. இதை பார்த்த சமூக வலைதள பயனர்கள் நவீன்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தனது சம்மதம் இன்றி தன்னை பெற்றதாக பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக மும்பையை சேர்ந்த வாலிபர் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ManSuingParents
    மும்பை:

    செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் ‘குழந்தைச் செல்வம்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத் தான். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை பேறுக்காக ஏங்கித் தவிப்பார்கள். மனித குலத்தின் நீடிப்பே குழந்தைகள் பிறப்பதில் தான் இருக்கிறது.

    குழந்தை பாக்கியத்தின் மகத்துவம் இவ்வாறு இருக்க, உயிர் பிறப்புக்கு எதிரான கொள்கையுடைய மும்பை வாலிபர் ஒருவர் தனது சம்மதம் இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

    மும்பையை சேர்ந்த ரபேல் சாமுவேல் (வயது 27) என்ற வாலிபர் தான் தனது பெற்றோருக்கு எதிராக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் போலி தாடி, மீசை மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு ‘யூ-டியூப்'பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், இந்த உலகில் பிறக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை. எனவே அவர்களின் வாழ்க்கைக்கு பெற்றோர் தான் உதவ வேண்டும்.

    உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், நாம் இந்த உலகில் நமது சம்மதம் இல்லாமலேயே கொண்டு வரப்பட்டு உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    எனவே நாம் எதற்கும் பெற்றோருக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல. நாம் வாழ்வதற்கு அவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும். பெற்றோர் குழந்தைகளை முதலீடாகவோ அல்லது காப்பீட்டு திட்டங்களாகவோ கருதக்கூடாது என்று கூறியுள்ளார்.

    மேலும் பேஸ்புக் பதிவில், ‘தங்களது சுகத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் என்னை பெற்றெடுத்து இருக்கிறார்கள். இவர்கள் சுகம் அனுபவிப்பதற்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி உள்ளது. இவரது இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    ‘மனநல ஆஸ்பத்திரியில் சேரும்படி' அவரை ஒருவர் பேஸ்புக்கில் விளாசி உள்ளார்.

    ரபேல் சாமுவேலின் அறிவிப்பு குறித்து அவரது தாய் கவிதா கர்னட் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில், ‘‘அவரது சம்மதத்தை பெற்று அவரை எப்படி பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினால், நான் எனது தவறை ஒப்புக் கொள்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ManSuingParents

    கனடாவில் லாரி ஓட்டுனராக பணிபுரியும் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஒட்டாவா:

    2009-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றவர் பல்விந்தர் சிங். இவர் அங்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், பல்விந்தர் சிங் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

    தகவல் அறிந்த காவல்துறையினர் பல்விந்தர் சிங்கின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 வாலிபர்கள் தாமாக முன்வந்து  சரணடந்தனர்.

    ஆனால், கொலை செய்துவிட்டு 3-க்கும் மேற்பட்டவர்கள் ஓடியதாக கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

    கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் மட்டும் இந்த ஆண்டுக்குள் 11 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவில் இன்று நகம் வெட்டுகிறார். #ShridharChillal
    நியூயார்க்:

    மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

    இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.

    உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.


    இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார்.

    அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ ( Ripley's Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது.

    ’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து  வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.

    ஆசையாசையாக கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுபார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.

    இதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் நகரை வந்தடைந்துள்ள ஸ்ரீதர் சில்லால், இன்று (புதன்கிழமை) பல கேமராக்கள் முன்னிலையில் தனது 66 ஆண்டு ‘நகதவத்தை’ துறக்கிறார். #ShridharChillal #longestfingernails #GuinnessRecord #Ripley'sBelieveItorNot
    ×