என் மலர்
நீங்கள் தேடியது "Giving Birth"
- கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
- தான் கர்ப்பமாக இருப்பது குறித்து தனக்கே தெரியாது என்றும் பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தா, கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 22ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெண் ரத்த வெள்ளத்தில் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், பச்சிளங்குழந்தை மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது.
- ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் சாஸ்திரி நகரில் உள்ள கேபிடல் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த சில மணி நேரங்களில் லிப்ட் அறுந்து விழுந்து தாய் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கரிஷ்மா (30) என்ற பெண் சிசேரியன் பிரசவத்திற்காக காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு அவர் பொது அறைக்கு மாற்ற ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். சம்பவ இடத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தப்பினர்.
பிறந்த பெண் குழந்தை வேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மீரட்டின் லோஹியா நகர் காவல் நிலையத்தில் கேபிடல் மருத்துவமனையின் மருத்துவர், மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீரட் தலைமை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 15 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மருத்துவ மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை மற்றும் சிஎம்ஓ குழுவை அமைத்துள்ளனர்.
- காட்டு யானை ஒன்று அவர்களது ஜூப்பை வழிமறித்தது.
- 2 மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்கு சென்றது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா அருகே உள்ள நெல்லியம்பதி பகுதியை சேர்ந்தவர் சுஜய் சர்தார். இவரது மனைவி சாம்பா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு இரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரசவத்துக்காக நெல்லியம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை கணவர் சுஜய் வீட்டில் இருந்து ஜீப்பில் அழைத்துச் சென்றார். காட்டு வழியில் அவர்கள் ஜீப்பில் பயணித்தனர்.
அப்போது சாம்பாவுக்கு பிரசவ வலி அதிகமானது. ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜீப்பிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதே நேரத்தில் உடல் நலம் பாதிப்பால் சாம்பாவை ஜூப்பில் இருந்து இறங்க முடிய வில்லை. இதனால் பிரசவத்துக்கு பின் அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் எதுவும் செய்ய முடிய வில்லை.
இதையடுத்து அந்த இடத்துக்கு சுதினா, ஜானகி என்ற 2 நர்சுகள் வந்தனர். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த இடத்தில் ஜீப்பில் வைத்தே தொப்புள் கொடியே அறுத்தனர். மேலும் சாம்பாவுக்கு தேவையான முதல்கட்ட சிகிச்சைகளும் அளித்தனர்.
அதன்பிறகு அருகில் உள்ள நென்மாரா சமூக நல மையத்திற்கு சம்பாவை அழைத்துச் செல்வதற்காக ஜீப்பில் புறப்பட்டனர்.
அந்த நேரத்தில் காட்டு யானை ஒன்று அவர்களது ஜூப்பை வழிமறித்தது. காட்டு யானை நிற்பதை பார்த்த சுஜய், அவரது மனைவி மற்றும் நர்சுகள் பீதியில் உறைந்தனர். வாகன செயல்பாட்டை நிறுத்தி விட்டு அனைவரும் ஜீப்புக்கு உள்ளேயே அமர்ந்திருந்தனர்.
யானையிடம் பிரசவமான பெண், அவரது கணவர் மற்றும் நர்சுகள் சிக்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். இருந்தபோதிலும் யானை வழியை விட்டு விலகிச் செல்லாமல் அங்கேயே நின்றது.
பெற்றெடுத்த குழந்தையுடன் சாம்பா தவித்தபடி இருந்தார். பின்பு 2 மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்கு சென்றது. அதன்பிறகு சாம்பா, அவர் பெற்றெடுத்த குழந்தை, கணவர் சுஜய் மற்றும் நர்சுகள் ஆகிய அனவரையும் வனத்துறை யினர் காட்டுப் பகுதியில் இருந்து பாது காப்பாக வெளியே அழைத்து வந்தனர்.
பின்பு சாம்பா மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆகிய இருவரும் நென்மாரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து பாலக்காடு பெண்கள் மற்றும் குழந்தை கள் மருத்துவமனைக்கு தாய் மற்றும் சேய் இருவரும் மாற்றப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் ‘குழந்தைச் செல்வம்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத் தான். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை பேறுக்காக ஏங்கித் தவிப்பார்கள். மனித குலத்தின் நீடிப்பே குழந்தைகள் பிறப்பதில் தான் இருக்கிறது.
குழந்தை பாக்கியத்தின் மகத்துவம் இவ்வாறு இருக்க, உயிர் பிறப்புக்கு எதிரான கொள்கையுடைய மும்பை வாலிபர் ஒருவர் தனது சம்மதம் இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மும்பையை சேர்ந்த ரபேல் சாமுவேல் (வயது 27) என்ற வாலிபர் தான் தனது பெற்றோருக்கு எதிராக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் போலி தாடி, மீசை மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு ‘யூ-டியூப்'பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், இந்த உலகில் பிறக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை. எனவே அவர்களின் வாழ்க்கைக்கு பெற்றோர் தான் உதவ வேண்டும்.
உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், நாம் இந்த உலகில் நமது சம்மதம் இல்லாமலேயே கொண்டு வரப்பட்டு உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
எனவே நாம் எதற்கும் பெற்றோருக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல. நாம் வாழ்வதற்கு அவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும். பெற்றோர் குழந்தைகளை முதலீடாகவோ அல்லது காப்பீட்டு திட்டங்களாகவோ கருதக்கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் பேஸ்புக் பதிவில், ‘தங்களது சுகத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் என்னை பெற்றெடுத்து இருக்கிறார்கள். இவர்கள் சுகம் அனுபவிப்பதற்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி உள்ளது. இவரது இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
‘மனநல ஆஸ்பத்திரியில் சேரும்படி' அவரை ஒருவர் பேஸ்புக்கில் விளாசி உள்ளார்.
ரபேல் சாமுவேலின் அறிவிப்பு குறித்து அவரது தாய் கவிதா கர்னட் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில், ‘‘அவரது சம்மதத்தை பெற்று அவரை எப்படி பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினால், நான் எனது தவறை ஒப்புக் கொள்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ManSuingParents