search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிப்ட் விபத்து"

    • லிப்டின் ஓரத்தில் நின்று எட்டி பார்த்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர்.

    சென்னை:

    சென்னை பாரிமுனை லிங்கிசெட்டி தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்று லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    4 தளங்கள் கொண்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் சர்வீஸ் லிப்டில் பயணித்த கீமாராம் என்பவர், இரண்டாவது தளத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியிருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    லிப்ட் கீழே இறங்கியபோது ஓரத்தில் நின்று எட்டி பார்த்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது.
    • ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் சாஸ்திரி நகரில் உள்ள கேபிடல் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த சில மணி நேரங்களில் லிப்ட் அறுந்து விழுந்து தாய் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    கரிஷ்மா (30) என்ற பெண் சிசேரியன் பிரசவத்திற்காக காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு அவர் பொது அறைக்கு மாற்ற ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது, லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். சம்பவ இடத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தப்பினர்.

    பிறந்த பெண் குழந்தை வேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக மீரட்டின் லோஹியா நகர் காவல் நிலையத்தில் கேபிடல் மருத்துவமனையின் மருத்துவர், மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மீரட் தலைமை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 15 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மருத்துவ மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை மற்றும் சிஎம்ஓ குழுவை அமைத்துள்ளனர்.

    • குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் உள்ள லிப்ட் அறுந்து விபத்து.
    • தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் திடீரென ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விபத்துக்குள்ளானது. இதில் லிப்டுக்குள் இருந்த 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் திடீரென ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மண்டலம் 1-ன் காவல்துறை துணை ஆணையர் லவினா சின்ஹா கூறுகையில் "தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று ​​தெரிவித்தார்.

    ×