search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
    X

    சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

    • லிப்டின் ஓரத்தில் நின்று எட்டி பார்த்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர்.

    சென்னை:

    சென்னை பாரிமுனை லிங்கிசெட்டி தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்று லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    4 தளங்கள் கொண்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் சர்வீஸ் லிப்டில் பயணித்த கீமாராம் என்பவர், இரண்டாவது தளத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியிருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    லிப்ட் கீழே இறங்கியபோது ஓரத்தில் நின்று எட்டி பார்த்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×