தமிழ்நாடு
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
- ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க முடியாமல் பெருமாள் விரக்தி.
- யாரும் இல்லாத நேரத்தில் பெருமாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை.
சென்னை மணலியை சேர்ந்தவர் பெயிண்டர் பெருமாள். இவர், பணத்தை செலவழித்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
மேலும், வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்தும் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
இதனை பெருமாளின் மனைவி அவரது நடவடிக்கையை கண்டித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க முடியாமல் பெருமாள் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் பெருமாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
Full View