தமிழ்நாடு

பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Published On 2023-12-20 05:43 GMT   |   Update On 2023-12-20 06:02 GMT
  • உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.
  • மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

* 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை.

* உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.

* தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News