தமிழ்நாடு

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2023-07-13 08:46 GMT   |   Update On 2023-07-13 09:12 GMT
  • விலைவாசி உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னை:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து, வரும் 20ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News