search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலைவாசி உயர்வு"

    • வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக செலவிடுகின்றனர் அமெரிக்கர்கள்
    • கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார்

    அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான கெல்லாக்'ஸ் (Kellogg's) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர், கேரி பில்னிக் (Gary Pilnick).

    அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை குறித்து கேரி பில்னிக் ஒரு பேட்டியில், "இரவு உணவுக்கு கெல்லாக்'ஸ் மற்றும் பால் மற்றும் ஒரு பழம் உண்ண பழகி கொள்ள வேண்டும். இதற்கு ஒரு டாலருக்கும் குறைவாக செலவாகும். " என தெரிவித்தார்.

    இது அமெரிக்க மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்களில் கேரிக்கு எதிராக பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    மளிகை பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதால், தங்கள் வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர்.

    காலை உணவை தாண்டி இரவு உணவிற்கும் கெல்லாக்'ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதாக கேரி தெரிவித்தார்.

    கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார். இதை தவிர பல ஊக்க தொகைகளும், சலுகைகளும் அவருக்கு நிறுவனம் வழங்கும்.

    மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, மிக அதிக ஊதியம் பெறும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது, அவரது அலட்சிய மனப்பான்மையை காட்டுவதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    2021-ஐ ஒப்பிடும் போது 2023 இறுதிக்குள் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கெல்லாக்'ஸ் போன்ற உணவு பண்டங்களில் உள்ள சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் அதனை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கேரியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.

    • 2024ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 சதவீதம் குறைய உள்ளதாக எச்சரித்தது ஐஎம்எஃப்
    • அத்தியாவசிய பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

    கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.

    பாகிஸ்தானின் பொருளாதார நிலையை ஆய்வு செய்த ஐஎம்எஃப், தற்போது $700 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம், இது குறித்து முடிவெடுக்கவிருந்த அதன் செயற்குழு சந்திப்பு, தள்ளி போடப்பட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது.

    பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ்வருடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், அதிகரிக்கும் விலைவாசியினால் பொருளாதாரம் நிலையற்றதன்மையை அடைந்திருப்பதாக எச்சரித்துள்ளது.

    கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு $853 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இது ஐஎம்எஃப் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் ரூ.43 பில்லியன் அதிகம்.

    கடந்த நவம்பர் மாதம், அந்நாட்டு நிதியமைச்சர், "மிக விரைவாக நிதியுதவி தேவைப்படுகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டே நிதியுதவி வழங்கினாலும், அதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை கடைபிடித்தாக வேண்டிய கட்டாயத்தால் பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியுள்ளது.

    இதன் விளைவாக பால், உணவு, பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வரலாறு காணாத உயர்வு அங்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அங்கு சில வாரங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இவையனைத்தும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கு 130 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன
    • 2020ல் கொண்டு வரப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு பொருளாதாரம் இன்னும் சீராகவில்லை

    ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கம், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organization).

    உலக நாடுகள் முழுவதும் பசியை ஒழிக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உணவு பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் 194 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துள்ளது. இதன் தலைமையகம், இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ளது.

    உலகளவில் 130 நாடுகளில் இந்த அமைப்பிற்கு அலுவலகங்கள் உள்ளன.

    சமீபத்தில் இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. தற்போது அந்த ஆய்வின் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரவுகள், புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த நீண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    2021ல் இந்தியர்களில் 74.1 சதவீதம் பேரால் ஆரோக்கியமான, சமச்சீரான உணவை பெற முடிவதில்லை என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2020ல் இந்த விகிதாசாரம் 76.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா கால ஊரடங்கிற்கு பிறகு முழுவதுமாக பொருளாதாரம் சீராகாததாலும், அதிகரிக்கும் உணவு பண்டங்களின் விலை மற்றும் எகிறும் விலைவாசிக்கு ஏற்றவாறு மக்களுக்கு ஊதிய உயர்வு இல்லாததும்தான் இதற்கு காரணம் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊதியத்திற்கும் மக்களின் வாங்கும் சக்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்தால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சத்தான உணவின்றி வாடும் சூழ்நிலை அதிகரிக்கலாம் என்றும் ஆரோக்கியமான உணவு எட்டாக்கனியாகலாம் என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

    • 517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும்.
    • 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சத்தியமங்கலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    அதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வந்த அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. வந்த பிறகு விலை உயர்வு அதிகமாக உள்ளது, பால்விலை மட்டும் ஐந்து முறை விலை ஏற்றியுள்ளனர். மின் கட்டணம் மட்டும் 15 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் விலை ஏற்றம் அடைந்துள்ளது. சிறுகுறு தொழிலாளிகளுக்கு 60 சதவிகிதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது, பத்திர பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை ஒன்றை மட்டுமே தி.மு.க. அரசு மக்களுக்கு பரிசாக அளித்து உள்ளது. 517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும். இந்த ஆட்சியை எப்போது தமிழகத்தில் அகலும், இருள் எப்போது நீங்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

    ஏழை ஜாதி இருக்கக்கூடாது என நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் தமிழகத்தில் சனாதானம் இருக்கக் கூடாது இந்து தர்மம் இருக்கக் கூடாது என தி.மு.க.வினர் பேசி கொண்டுள்ளனர். ஊழல் தான் நம் மண்ணில் இருக்கக் கொண்டு கூடிய பெரிய பிரச்சனை. தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. 2006-ல் இருந்து 2011 வரை தி.மு.க. அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது.

    தி.மு.க.வினர் சினிமா படம் தயாரிக்கின்றனர் அதை வெளியிடுகின்றனர். கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். இதனை மக்கள் வெறுக்கின்றனர். இந்த அரசியல் வேண்டாம், இதனை எதிர்த்து நிற்க துடிக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு கூட்டம் நமக்கு வருகிறது, நடக்கின்ற ஆட்சியை அடியோடு வேறறுக்க வேண்டும் என என் மண் என் மக்கள் யாத்திரைக்கு மக்கள் வருகின்றனர்.

    தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது, ஒரு குழந்தை பிறக்கும்போதே கடனாளியாக பிறகின்றது , அதேபோல குஜராத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போதே 17 ஆயிரம் ரூபாய் லாபத்தில் பிறகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடாந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் புதுவிதமான அரசியலை மக்கள் பார்க்க வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதிகளிலும் வெளிப்படையாக தெரிகின்றது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. மக்களுக்கு இந்த நடைமுறை அரசியல் சுத்தமாக பிடிக்கவில்லை. அதேபோல பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி கடை கோடியில் உள்ளவர்கள் வரை சென்றுள்ளது, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எந்த மாங்காய் மரம் சுவையாக உள்ளதோ அதில் தான் கல் எடுத்து அடிப்பார்கள் என்பதைப் போல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை குறிவைப்பது பேசுவது நல்லது தானே, கல்லடி பட்டு தான் மாங்கா மரம் சுவையான மாம்பழங்களை கொடுக்கின்றது. விமர்சனத்திற்கு எப்போதும் அண்ணாமலை அஞ்சுவது கிடையாது.

    அண்ணாமலைக்கு என்று தனிப்பணி அரசியல் உள்ளது. அந்த அரசியலில் நான் ஒரு பெட்டிக்குள் அடங்க விரும்பவில்லை. தமிழகத்தில் முன்பு இருந்த அரசியல்வாதிகள் இதுபோன்றுதான் அரசியல் செய்தார்கள் என்றால் அதனை அண்ணாமலை செய்ய விரும்பவில்லை. என்னுடைய அரசியல் ஒரு மாற்று அரசியல். தமிழகத்தில் நடந்து வரும் எந்த அரசியலும் மக்களுக்கு பிடிக்கவில்லை, நானும் இந்த அரசியலை மாற்றிக்கொள்ளவில்லை,

    என்னுடைய கருத்துக்களை ஆக்ரோசமாகவும் உரக்க தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளேன், நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைத்தது கிடையாது.

    பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் உறுதியாக வளர்ந்துள்ளது அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இன்னும் பாஜக வேகமாக வளர வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.

    அதிமுக கூட்டணி முறிவுக்கு பின் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்களோடு கூட்டணி என அவர் தெரிவித்தார்.

    • தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி, நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாளை தாலுகா கமிட்டி மற்றும் பாளை கிளை சார்பில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித் தார். தொடர்ந்து கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பாளை பஸ் நிலையம் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளை பஸ் நிலையம் சிக்னல் பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் சிறிது நேரம் மாற்று பாதையில் இயக்கப பட்டது.

    தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.

    போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் கோபாலன், மாவட்டத் தலைவர் மதுபால், இடை கமிட்டி செயலாளர்கள் நாராயணன், குழந்தைவேலு, கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் அம்பை, வி.கே புரம், வள்ளியூர், களக்காடு, முக்கூடல், வீரவநல்லூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது. 

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
    • மோடி ஆட்சியில் செயல்படும் திட்டம் எல்லாமே உருப்படாத திட்டம்தான்.

    சென்னை:

    பாரதிய ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கிண்டி ரயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    கிண்டி ரெயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். அங்கு வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    ரெயில் மறியலையொட்டி கிண்டி ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது போலீசாருக்கும் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ரெயில் மறியல். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விலைவாசி பிரச்சினை இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

    மோடி ஆட்சியில் செயல்படும் திட்டம் எல்லாமே உருப்படாத திட்டம்தான்.

    தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விலைவாசியை கட்டுப்படுத்த கோரி போராட்டம் நடத்தி வருகிறோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி எதிர் கட்சிகளை திசை திருப்பதான் இந்தியா என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

    அனைத்து இளைஞர்களுக்கும் சரியான வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை அண்ணா சாலையில் தபால் நிலையம் முன்பு மத்திய குழு உறுப்பி னர் சம்பத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப் பட்டனர்.

    திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் லோகநாதன் மற்றும் ஜெயராமன், பாக்கியம், கதிர்வேலு உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைதாகியுள்ளனர்.

    சென்னையில் மட்டும் 9 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து இருப்பதால் அடுத்த மாதம் முதல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    • விலை உயர்வுக்கு அரிசி உற்பத்தி குறைந்தது மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை உயர்ந்து விட்டதால் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை இன்னும் குறையவில்லை.

    இதனால் மக்கள் காய்கறிகள் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மளிகை பொருட்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் விலை உயர்த்தப்பட்ட பின்னர் எந்த பொருட்களின் விலையையும் மீண்டும் வியாபாரிகள் குறைப்பது இல்லை.

    தற்போது அரிசி விலையும் கடுமையாக கூடியுள்ளது. நமது அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது. காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும் அரிசியை அதிகளவில் பயன்படுத்துகிறோம்.

    கடந்த மாதத்தில் இருந்தே அரிசி விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த மாதத்தில் மேலும் உயர்ந்து 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

    தரமான சாப்பாட்டு அரிசி வகைகள் 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்தது. அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது.

    இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது. அரிசி மொத்த வியாபாரிகள் கூறும்போது, "கடந்த மாதத்தில் இருந்து விலை உயரத் தொடங்கியது. இந்த மாதத்தில் மட்டும் 20 கிலோ மூட்டைக்கு ரூ.80 கூடியுள்ளது. ரூ.820-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி தற்போது ரூ.900-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல சாப்பாட்டு அரிசி (சிவாஜி, 5 ஸ்டார்) போன்றவை ரூ.1,400-ல் இருந்து ரூ.1,480 ஆக அதிகரித்துள்ளது. சில்லரையில் ரூ.1,600 ஆக விற்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வுக்கு அரிசி உற்பத்தி குறைந்தது மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணம் என்று தெரிவிக்கின்றனர்.

    எல்லா ரக அரிசி விலையும் கூடியுள்ளதால் கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா பொன்னி அரிசி கிலோ ரூ.38-ல் இருந்து ரூ.55 ஆக அதிகரித்து உள்ளது. இதே போல் இட்லி அரிசியும் கிலோவுக்கு ரூ.4 வரை உயர்ந்துள்ளது.

    அரிசி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட வரவு-செலவில் துண்டு விழுந்துள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்கள், மாதச் சம்பளம் வாங்குவோரின் வருவாயில் மளிகை பொருட்களின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து இருப்பதால் அடுத்த மாதம் முதல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    • தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய படி, தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர்.

    சென்னை:

    காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த கண்டன போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    போராட்டத்தின் போது விலைவாசி உயர்வுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர்.

    தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய படி, தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை ஏற்றத்தின் போது அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு அரசு குறைந்த விலையில் வழங்கியதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினர்.

    போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கமலக்கண்ணன், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயவர்த்தன் எஸ்.ஆர்.விஜயகுமார், சங்கரதாஸ், சசிரேகா, செய்தி தொடர்பாளர் சத்யன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, மற்றும் பேரவை மாநில துணைச் செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, இணைச் செயலாளர் டாக்டர் சுனில், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், வக்கீல் பழனி, தென் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சாமிநாதன், கடும்பாடி எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சுகுமார், ஷேக் அலி, எஸ்.எம். சரவணன், இனியன், கதிர் முருகன், எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, மார்க்கெட் சுரேஷ், வசந்த குமார், வைகுண்டராஜன், மற்றும் வக்கீல் சதாசிவம், வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் திருமங்கலம் மோகன், கொளத்தூர் முன்னாள் பகுதிச் செயலாளர் கொளத்தூர் கணேசன், அபிராமி பாலாஜி, சேத்பேட் சம்பத்குமார், கன்னியப்பன், மாரிமுத்து, பாலாஜி, தசரதன், நித்யா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தினால் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சாலை அ.தி.மு.க. தொண்டர்களால் நிரம்பியது.

    ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மதுரவாயல் மின்சார அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, சிறுனியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் அப்துல்ரகீம், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் எம்.பி. திருத்தணி அரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மணிமாறன், குப்பன், இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர்கள் இன்பராஜ், துண்டல் பாபு, ஜாவித் அகமது, எஸ்.பி.ஆர். கிஷோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோவில் இடங்களில் காலம் காலமாக வீடு கட்டி வாழ்ந்தவர்களிடம் தகுதியான குத்தகை வரி வசூலிக்காமல் லட்ச கணக்கில் வசூலிக்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைசர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை காலம் தொடங்கி விட்டது. முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை பற்றி துரைமுருகன் கூறிய பாடலை சுட்டிக்காட்டி பேசினார். தற்போது தமிழகத்தில் நடைபெறும் காவல்துறை தமிழக ஏவல்துறையாக நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலத்தில் என்ன அடிப்படை திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள் என கூற முடியுமா? இந்து சமய அறநிலைத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு, வீட்டுவரி உயர்வு, பதிவுகட்டணம், கோவில் இடங்களில் காலம் காலமாக வீடு கட்டி வாழ்ந்தவர்களிடம் தகுதியான குத்தகை வரி வசூலிக்காமல் லட்ச கணக்கில் வசூலிக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, அனிதா ராதா கிருஷ்ணன், அனைவரும் கூடிய விரைவில் புழல் சிறைக்கு செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    • காய்கறிகளை மாலையாக அணிந்து பங்கேற்ற பெண் நிர்வாகிகள்
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில் :

    மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அனைத்து துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அக் ஷயா கண்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அவை தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், சிவ செல்வராஜன், மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், சாந்தினி பகவதியப்பன், பார்வதி, ஆர்.ஜே.கே. திலக், பகுதிச் செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், ஜெய சுதர்சன், மாமன்ற உறுப்பினர்கள் கோபால சுப்பிரமணியம், சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விலை வாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாரி, இஞ்சி, தக்காளி, மிளகாய் மற்றும் பருப்பு ஆகியவற்றை வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காய்கறிகளை வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், குளச்சல் நகர செயலாளர் ஆ ண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா கழுத்தில் தக்காளியை மாலை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் வெண்டைக்காயை மாலையாக அணிந்திருந்தார். இதே போல் பெண்கள் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கலந்து கொண்டதால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்.
    • 17 அமர்வுகள் இடம்பெறும் நிலையில், 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.

    இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிக்கட்சிகள் கேள்விகள் எழுப்பி நெருக்கடி அளித்து வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலைவாசி உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து, வரும் 20ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×