search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்- ராஜன்செல்லப்பா பேச்சு
    X

    ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா பேசினார்.

    விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்- ராஜன்செல்லப்பா பேச்சு

    • அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் விலை உயர்வை கண்டித்து மேலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    மேலூர்

    மதுரை புறநகர் மாவட்ட மேலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. பால், மின் கட்டணம், சொத்துவரி ஆகியவை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

    இந்த மோசமான விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். எனவே வருகிற தேர்தலில் அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், அவைத் தலைவர் ராஜேந்திரன், மண்டல செயலாளர் ராஜசத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் அம்பலம், ஜபார், சேர்மன் பொன்னு சாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் அருண், நிர்வாகிகள் வெற்றி செழியன், குலோத்துங்கன், பொன்ராஜேந்திரன், நகர் இணை செயலாளர் சரவணகுமார், முன்னாள் சேர்மன் சாகுல் அமீது, கவுன்சிலர் திவாகர் தமிழரசன், மெகராஜ் பீபி, பள்ளப்பட்டி முருகேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×