search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

    • விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.

    விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிநகரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ராமநாதபுரம் பாரதிநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலை மையில், மண்டபம் (மேற்கு) ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் சாமிநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபா லசிங்கம், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், முதுகுளத்தூர் நகர் கழக செயலாளர் சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.

    ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டி யன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் வாலாந்தரவை ஜெயபால், மருதுபாண்டியர் நகர் ராஜேந்திரன், பாரதிநகர் தினகரன், மாரியப்பன், வசந்தநகர் வீரபாண்டியன், மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கருணாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய பொருளாளர் ரகுபதி ராஜா, ஒன்றிய துணை செயலாளர் தெய்வேந்தி ரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், கங்காதேவி, மாவட்ட மீனவரணி துணை செயலாளர் வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் தலைமையில், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர்கள் சுமதிஜெயக்குமார், செவத்தான் முனியாயி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன், நாகநாதன், காஞ்சிரங்குடி பாலு, முன்னாள் கவுன்சிலர் சரண்யா நாகநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் வழங்கினர்.

    ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி யன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவிகா, ஒன்றிய கவுன்சிலர்களான ராஜ்குமார், குப்புராமு சாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×