தமிழ்நாடு

பழனியில் பா.ஜனதா பயிற்சி முகாம்- எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு

Published On 2022-06-18 04:44 GMT   |   Update On 2022-06-18 04:44 GMT
  • பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
  • சிறுபான்மைபிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ, வினோஜ் பி.செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

பழனி:

பழனியில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதில் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதில் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பார்வையாளருமான சி.டி.ரவி, இணைப்பார்வையாளர் சுதாகர்ரெட்டி, தமிழக பொதுச்செயலாளர் சீனிவாசன், சிறுபான்மைபிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ, வினோஜ் பி.செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய அமைப்புச்செயலாளர் சந்தோஷ், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News