கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து
- மாபெரும் தியாக திருநாளானது பிறரை புரிந்துகொள்ளும் தன்மையை வளர்க்கவும், தியாகத்தை கடைபிடிக்கவும், மக்களுக்கு வாய்ப்பினை வழங்குகிறது.
- நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் நாம் உறுதி கொள்வோம்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், கூறி இருப்பதாவது:-
'ஈத்-உல்-அதா (பக்ரீத்) தியாகத் திருநாளில் நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் விருப்பத்திற்கு இணங்க நல்ல நோக்கத்திற்காக தனது அளப்பரியத் தியாகத்தை செய்த பக்தியுள்ள தலைவரை இந்த நாள் குறிப்பிடுகிறது. இந்த மாபெரும் தியாக திருநாளானது பிறரை புரிந்துகொள்ளும் தன்மையை வளர்க்கவும், தியாகத்தை கடைபிடிக்கவும், அமைதியைப் பேணவும், உலகளாவிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், மக்களுக்கு வாய்ப்பினை வழங்குகிறது.
இந்த புனிதமான நன்னாளில், அன்பை வெளிப்படுத்துவதன் தேவையையும், சகோதரத்துவத்தின் மாண்பையும் மற்றும் மனித குலத்திற்கு ஆற்ற வேண்டிய சேவைகளையும் முழுமையாக குறிப்பிடுகிறது. அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் நாம் உறுதி கொள்வோம்.
இந்த தியாக திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன் மற்றும் மகிழ்ச்சியையும், வழங்குவதுடன் நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.