தமிழ்நாடு

விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: திருவண்ணாமலையில் நாளை போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு

Published On 2023-11-17 10:28 GMT   |   Update On 2023-11-17 10:28 GMT
  • விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
  • விவசாயிகளை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த அரசின் அடக்கு முறையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்கு முறையைக் கண்டித்து நாளை (18-ந் தேதி) தமிழக பா.ஜனதா சார்பில் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News