தமிழ்நாடு
தம்பதியராக சென்று வெற்றி சான்றிதழை பெற்ற வெங்கடாஜலம்-உமாமகேஸ்வரி

தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மேட்டூரில் வென்ற கணவன்-மனைவி

Published On 2022-02-23 04:07 GMT   |   Update On 2022-02-23 04:07 GMT
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட உமாமகேஸ்வரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த நாகராஜை 269 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
மேட்டூர்:

தி.மு.க.வை சேர்ந்த தம்பதிகள் முதல்மறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட உமாமகேஸ்வரியும், 14-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அவரது கணவர் வெங்கடாஜலமும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

உமாமகேஸ்வரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த நாகராஜை 269 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வெங்கடாசலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரேவதியை 177 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இருவரும் வெற்றி சான்றிதழை தம்பதியராகவே சென்று பெற்றுக்கொண்டனர். மேட்டூர் நகராட்சியில் முதல்முறையாக தம்பதிகள் இருவரும் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



Tags:    

Similar News