தமிழ்நாடு
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று 691 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

Published On 2021-12-21 16:00 GMT   |   Update On 2021-12-21 16:00 GMT
தமிழகத்தில் தற்போது வரை 7,078 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை 

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்று பாதித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். 1,00,342 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,41,013 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 691 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,244 ஆக உயர்ந்துள்ளது.



தமிழகத்தில் தற்போது 7,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,691 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கோவையில் 97 பேர், ஈரோட்டில் 51 பேர், திருப்பூரில் 44 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 பேர், சேலத்தில் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News