செய்திகள்
ரெயில்

மதுரை வழியாக செல்லும் ரெயில்கள் 16-ந்தேதி வரை ரத்து

Published On 2021-05-28 10:37 GMT   |   Update On 2021-05-28 10:37 GMT
ஜூன் 1-ந்தேதி முதல் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை:

மதுரை கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தளர்வுற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மதுரை கோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக மேலும் சில ரெயில்கள், வருகிற ஜூன் 16-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி வருகிற 2-ந் தேதி முதல் தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் சென்னை எழும்பூர்- ராமேசுவரம் சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் மதுரை-புனலூர் சிறப்பு ரெயில் சேவையில் திருவனந்தபுரம் -புனலூர் இடையேயான போக்குவரத்து இரு மார்க்கங்களிலும் வருகிற 16-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1ம் தேதி முதல் சென்னை எழும்பூர்- குருவாயூர் சிறப்பு ரெயில் சேவையில் திருவனந்தபுரம் - குருவாயூர் இடையேயான போக்குவரத்து பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News