செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி

Published On 2021-04-23 07:53 GMT   |   Update On 2021-04-23 07:53 GMT
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த போலீஸ் ஏட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை:

சென்னை கோட்டூர்புரம் உளவுப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் கருணாநிதி. 48 வயதான அவருக்கு கடந்த 13-ந் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கடந்த 21-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

ஆர்.ஏ.புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு சுந்தரவள்ளி என்ற மனைவியும், 17 வயதில் மகனும் உள்ளனர்.

Tags:    

Similar News