செய்திகள்
கோப்புப்படம்

தர்மபுரியில் விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-04-17 09:44 GMT   |   Update On 2021-04-17 10:34 GMT
தர்மபுரியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி வள்ளி (வயது 28). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வள்ளி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். வள்ளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
Tags:    

Similar News