செய்திகள்
கீழக்கரை அருகே விபத்து: வேன் மோதி பள்ளி மாணவர் பலி
கீழக்கரை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் முகமது சுகைப் (வயது 17). இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தனது நண்பர் மொக்சின் கமில் என்பவருடன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக ரெகுநாதபுரம் சென்று கொண்டிருந்தார்.
சேதுநகர் சலவை தொழிலாளர் சங்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பள்ளி வேன் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த முகமது சுகைப் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது நண்பர் மொக்சின் கமிலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் சிக்கிய பள்ளி வேன் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் முகமது சுகைப் (வயது 17). இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தனது நண்பர் மொக்சின் கமில் என்பவருடன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக ரெகுநாதபுரம் சென்று கொண்டிருந்தார்.
சேதுநகர் சலவை தொழிலாளர் சங்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பள்ளி வேன் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த முகமது சுகைப் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது நண்பர் மொக்சின் கமிலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் சிக்கிய பள்ளி வேன் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.