செய்திகள்
பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளங்குழந்தை கிணற்றில் வீசி கொலை
சங்கரன்கோவில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளங்குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது தெற்கு சங்கரன் கோவில்.
இதன் புறநகர் பகுதியாக உள்ள பாலாஜி நகரில் பொட்டல்குளம் என்ற குளம் உள்ளது. நீரின்றி வறண்டு காணப்படும் அந்த குளத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.
உடனடியாக அவர்கள் தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த அந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டனர். மேலும் 4 முதல் 5 நாட்கள் குழந்தை தண்ணீரிலேயே கிடந்ததால் உடல் முழுவதும் அழுகி விட்டது. இதனால் துர்நாற்றம் வீசியதால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதற் கட்ட பரிசோதனை செய்த தில் குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆனது தெரிய வந்தது. அந்த குழந்தை பிறந்த மறுநாளே கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. போலீசார் அந்த குழந்தை உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார்? கள்ளத்தொடர்பில் பிறந்ததால் கொலை செய்யப்பட்டதா? அல்லது வளர்க்க வசதி இல்லாமல் யாரேனும் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது தெற்கு சங்கரன் கோவில்.
இதன் புறநகர் பகுதியாக உள்ள பாலாஜி நகரில் பொட்டல்குளம் என்ற குளம் உள்ளது. நீரின்றி வறண்டு காணப்படும் அந்த குளத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர்.
உடனடியாக அவர்கள் தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த அந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டனர். மேலும் 4 முதல் 5 நாட்கள் குழந்தை தண்ணீரிலேயே கிடந்ததால் உடல் முழுவதும் அழுகி விட்டது. இதனால் துர்நாற்றம் வீசியதால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் சம்பவ இடத்திற்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதற் கட்ட பரிசோதனை செய்த தில் குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆனது தெரிய வந்தது. அந்த குழந்தை பிறந்த மறுநாளே கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. போலீசார் அந்த குழந்தை உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார்? கள்ளத்தொடர்பில் பிறந்ததால் கொலை செய்யப்பட்டதா? அல்லது வளர்க்க வசதி இல்லாமல் யாரேனும் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.