செய்திகள்
திருப்பதியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
திருப்பதியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி தனம்பள்ளி நகரில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் உதவியுடன் வெட்டி ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலையில் வங்கி அதிகாரிகள் பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து தவனம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.