செய்திகள்
நகை பறிப்பு

பெண்ணை கல்லால் தாக்கி நகை பறிப்பு

Published On 2020-12-05 08:43 GMT   |   Update On 2020-12-05 08:43 GMT
பெண்ணை கல்லால் தாக்கி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

ராமகுப்பம் மண்டலம் செல்திகாணிப்பள்ளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவருடைய மனைவி ருக்மணியம்மா (வயது 45). இவர், நேற்று முன்தினம் கிராமம் அருகில் உள்ள நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டபோது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நிலத்துக்கு வந்து பாறாங்கல்லால் ருக்மணியம்மாவை தாக்கினர். இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ராமகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News