செய்திகள்
ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-10-22 08:03 GMT   |   Update On 2020-10-22 08:03 GMT
ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* பொதுமுடக்கத்தால் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

அளிக்கப்படும்.

* ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும், மசாஜ் செய்யவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

* சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News