search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அறிவிப்பு"

    • விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
    • ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சிலை நிறுவுதல் மற்றும் விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    விநாயகர் சிலை அமைப்பாளர்கள் நிறுவுவதற்கு மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப்பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை நிறுவிட வேண்டும்.சிலைகள் — சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகள் பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்ககூடாது.

    விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும்.

    மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவிஆணையர்களிடமும் ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய சார் ஆட்சியர்-வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் அதன் விபரங்களை தெரிவிக்கப்பட வேண்டும். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், காவல் துறையினரால் அனுமதியளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது. ஊர்வலத்தின் போது காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டோ அல்லது மற்றவர்களது மனம் புண்படும்படியோ கோஷமிடல் கூடாது. ஊர்வலம் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் நடைபெற வேண்டும்.

    மேலும் பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், சாலையின் இடதுபுறமாக செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது எந்த விதமானஅசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கும், அமைதியாக ஊர்வலம் நடத்தி முடிக்கவும், ஊர்வலத்தை நடத்துகிற பொறுப்பாளர்கள் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.

    மேலும் விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் போதுமான மின் விளக்கு வசதிகள் செய்யப்படல் வேண்டும். ஊர்வலத்தின் போது போக்குவரத்திற்கோ, பொது சொத்திற்கோ சேதம் விளைவித்தால் அமை ப்பாளர்கள் தான் முழு பொறுப்பாளர் ஆவார்கள்.

    நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வருவாய் கோட்டாட்சியர்கள்-காவல் உதவி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர்களால் வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி-டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாட்டுவண்டி-3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. இது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட அமைப்புகள் பின்பற்றி நடக்க வேண்டும்.

    விநாயகர் சதூர்த்தி திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கினை பராமரித்திட அனைத்து அமைப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பிரவின்குமார் அபிநபு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும்.
    • தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

    விருது பெற விரும்பும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் தமிழ் நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    விருதினை பெறுவதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின், அவர்கள் 10.6.2023 மாலை 5 மணிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (https://awards.tn/gov.in) விண்ணப்பித்தும் மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை, கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2022-23ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-23 என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி தாங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் வகையி, மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

    அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்கவிரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயரினை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திட வேண்டும்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1000 மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து முதல் பரிசு ரூ.36 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.24 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரம், கால்பந்து, ஹாக்கி போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.54 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.36 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.18 ஆயிரம் வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

    மேற்கண்ட போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703487 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பெற்றிடலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    • மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
    • இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், அவர் கூறியிருப்பதாவது:-உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் பி.எப்7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் பொது இடங்கள், கடற்கரை, சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கட்டா யமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    எதிர்வரும் புது வருட, 1.1.2023 அன்று 01 மணிக்கு மேல்(டிசம்பர் 31 நள்ளிரவுக்கு பிறகு) தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், பார்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்புக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச்செல்லும் போது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
    • கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவண்ணாமலை மாவட்டத்தினர்
    • கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுகிறது.

    திருவிழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் சிலைகள் நீர் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.

    இந்த விழாவின்போது அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விழா குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 9.8.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்படும். விநாயகர் சிலை வைக்க உள்ளவர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட உதவி கலெக்டரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் https://Tiruvannamalai.nic.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    உதவி கலெக்டரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    ×