search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona precaution"

    • மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
    • இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், அவர் கூறியிருப்பதாவது:-உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் பி.எப்7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் பின்வரும் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் அமல்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் அனைவரும் பொது இடங்கள், கடற்கரை, சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கட்டா யமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    எதிர்வரும் புது வருட, 1.1.2023 அன்று 01 மணிக்கு மேல்(டிசம்பர் 31 நள்ளிரவுக்கு பிறகு) தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், பார்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்புக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச்செல்லும் போது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
    • அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்

    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒவ்வொரு நோயாளிகளிடம் சென்று மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    நோயாளிகளிடம் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களையும் கேட்டறிந்தார் அப்போது நோயாளிகள் சில குறைபாடுகளை கூறினார்கள் அதனை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். அப்போது பணம் கேட்பதாக ஊழியர்கள் மீது நோயாளிகள் புகார் அளித்தனர். கலெக்டர் அந்த ஊழியரை அழைத்து எச்சரித்தார் தொடர்ந்து மருத்துவமனை கழிவறைகள் உள்ளிட்ட வைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி மருத்துவமனை மருத்துவ அலுவலர் பொறுப்பு கார்த்திகேயன், டாக்டர் ஹேமலதா உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு நோயாளி களிடம் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் கேட்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படும் என எச்சரித்தார் மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகள் உடனடியாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட வேண்டும் முககவசம் அணிந்த பின்னே அனுமதிக்க வேண்டும் மேலும் முக கவசம் அணிவதை குடியாத்தம் உதவி கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 4 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் 8 பேர் வீட்டில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் 3பேர் சிகிச்சையில் உள்ளனர் இவர்களுக்கு குறைந்த அளவு பாதிப்பு உள்ளது மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது.12 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தடுப்பூசி பெற்றோர்களின் அனுமதியோடு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றார்.

    ×