செய்திகள்
அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா நோயாளிகளுக்கு உணவு எடுத்து செல்ல பேட்டரி வாகனம்- அமைச்சர் வழங்கினார்

Published On 2020-09-26 05:11 GMT   |   Update On 2020-09-26 05:11 GMT
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு எடுத்து செல்ல பேட்டரி வாகனத்தை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.
திருவள்ளூர்:

திருவள்ளூரில் ரோட்டரி கிளப் சார்பில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொண்டு செல்ல ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பேட்டரி வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பேட்டரி வாகனத்தை வழங்கினார்.மேலும் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கமாண்டோ பாஸ்கரன், திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி டீன் அரசிஸ்ரீவர்சவ், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், ரோட்டரி கிளப் தலைவர் சந்துரு, கவர்னர் பாண்டியன், செயலாளர் பாலாஜி, பொருளாளர் மோகன்குமார், திராவிடமணி இளையமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News