செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-09-21 18:55 GMT   |   Update On 2020-09-21 18:55 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 344 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 187
செங்கல்பட்டு - 2,424
சென்னை - 9,871
கோவை - 4,475
கடலூர் - 2,208
தர்மபுரி - 992
திண்டுக்கல் - 597
ஈரோடு - 1,144
கள்ளக்குறிச்சி - 869
காஞ்சிபுரம் - 1,061
கன்னியாகுமரி - 631
கரூர் - 472
கிருஷ்ணகிரி - 836 
மதுரை - 792
நாகை - 944
நாமக்கல் - 934
நீலகிரி - 724
பெரம்பலூர் - 102
புதுக்கோட்டை - 817
ராமநாதபுரம் - 230
ராணிப்பேட்டை - 540
சேலம் - 2,260
சிவகங்கை - 279
தென்காசி - 640
தஞ்சாவூர் - 1,143
தேனி - 547
திருப்பத்தூர் - 638
திருவள்ளூர் - 1,720
திருவண்ணாமலை - 1,203
திருவாரூர் - 827
தூத்துக்குடி - 803
திருநெல்வேலி - 962
திருப்பூர் - 1,590
திருச்சி - 767
வேலூர் - 916
விழுப்புரம் - 984
விருதுநகர் - 316
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 4
உள்நாடு - 44
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 46,495

Tags:    

Similar News