செய்திகள்
சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 697 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 735 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 166
செங்கல்பட்டு - 2,119
சென்னை - 9,883
கோவை - 3,593
கடலூர் - 2,558
தர்மபுரி - 816
திண்டுக்கல் - 676
ஈரோடு - 1,046
கள்ளக்குறிச்சி - 1,014
காஞ்சிபுரம் - 1,310
கன்னியாகுமரி - 814
கரூர் - 442
கிருஷ்ணகிரி - 826
மதுரை - 732
நாகை - 1,155
நாமக்கல் - 879
நீலகிரி - 577
பெரம்பலூர் - 106
புதுக்கோட்டை - 791
ராமநாதபுரம் - 270
ராணிப்பேட்டை - 637
சேலம் - 2,162
சிவகங்கை - 233
தென்காசி - 615
தஞ்சாவூர் - 997
தேனி - 740
திருப்பத்தூர் - 561
திருவள்ளூர் - 2,053
திருவண்ணாமலை - 1,461
திருவாரூர் - 771
தூத்துக்குடி - 719
திருநெல்வேலி - 1,065
திருப்பூர் - 1,792
திருச்சி - 871
வேலூர் - 1,076
விழுப்புரம் - 841
விருதுநகர் - 400
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 5
உள்நாடு - 32
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 46,806