செய்திகள்
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா
திருச்சியில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் பணிபுரியும் 120 பேரில் 20 பேருக்கு தொற்று உறுதியானதால் காவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் பணிபுரியும் 120 பேரில் 20 பேருக்கு தொற்று உறுதியானதால் காவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.