செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவள்ளூரில் இன்று மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-06 09:22 GMT   |   Update On 2020-08-06 09:22 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 15,896 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 15,896 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் கொரோனாவிலிருந்து 11,759 பேர் குணமடைந்த நிலையில் 3,548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News