செய்திகள்
மதுரை அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
மதுரை அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள், பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மூதாட்டியை மிளகாய்பொடி தூவி கொலை செய்துவிட்டு, 5 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள், பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மூதாட்டியை மிளகாய்பொடி தூவி கொலை செய்துவிட்டு, 5 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.