செய்திகள்
கொலை

மதுரை அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

Published On 2020-07-16 11:18 GMT   |   Update On 2020-07-16 11:18 GMT
மதுரை அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மதுரை:

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள், பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மூதாட்டியை மிளகாய்பொடி தூவி கொலை செய்துவிட்டு, 5 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News