செய்திகள்
கோப்பு படம்

ஒரே நாளில் சுமார் 4,163 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - 82 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

Published On 2020-07-10 14:48 GMT   |   Update On 2020-07-10 14:48 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 680 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,829 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 163 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து இன்று குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் - 1
செங்கல்பட்டு - 156
சென்னை - 2,869
கோவை - 0
கடலூர் - 36
தர்மபுரி - 3
திண்டுக்கல் - 26
ஈரோடு - 3
கள்ளக்குறிச்சி - 22
காஞ்சிபுரம் - 44
கன்னியாகுமரி - 39
கரூர் - 0
கிருஷ்ணகிரி - 25 
மதுரை - 47
நாகை - 4
நாமக்கல் - 1
நீலகிரி - 2
பெரம்பலூர் - 2
புதுக்கோட்டை - 40
ராமநாதபுரம் - 50
ராணிப்பேட்டை - 20
சேலம் - 54
சிவகங்கை - 16
தென்காசி - 0
தஞ்சாவூர் - 11
தேனி - 5
திருப்பத்தூர் - 15
திருவள்ளூர் - 145
திருவண்ணாமலை - 22
திருவாரூர் - 8
தூத்துக்குடி - 48
திருநெல்வேலி - 30
திருப்பூர் - 0
திருச்சி - 81
வேலூர் - 85
விழுப்புரம் - 102
விருதுநகர் - 140
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 4
உள்நாடு - 6
ரெயில் நிலைய கண்காணிப்பு - 1

மொத்தம் - 4,163
Tags:    

Similar News