செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக விவரம்

Published On 2020-07-10 14:29 GMT   |   Update On 2020-07-10 14:29 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 82 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 38
செங்கல்பட்டு - 3,127
சென்னை - 18,616
கோவை - 744
கடலூர் - 463
தர்மபுரி - 149
திண்டுக்கல் - 282
ஈரோடு - 221
கள்ளக்குறிச்சி - 807
காஞ்சிபுரம் - 1,797
கன்னியாகுமரி - 658
கரூர் - 55
கிருஷ்ணகிரி - 64 
மதுரை - 4,131
நாகை - 173
நாமக்கல் - 57
நீலகிரி - 127
பெரம்பலூர் - 10
புதுக்கோட்டை - 280
ராமநாதபுரம் - 985
ராணிப்பேட்டை - 724
சேலம் - 956
சிவகங்கை - 284
தென்காசி - 298
தஞ்சாவூர் - 225
தேனி - 997
திருப்பத்தூர் - 196
திருவள்ளூர் - 2,221
திருவண்ணாமலை - 1,212
திருவாரூர் - 287
தூத்துக்குடி - 940
திருநெல்வேலி - 777
திருப்பூர் - 130
திருச்சி - 517
வேலூர் - 1,498
விழுப்புரம் - 509
விருதுநகர் - 943
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 281
உள்நாடு - 229
ரெயில் நிலைய கண்காணிப்பு - 97

மொத்தம் - 46,105

Tags:    

Similar News