செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா

Published On 2020-07-10 09:46 GMT   |   Update On 2020-07-10 09:46 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,861 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,765-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 2,758 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,861 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1,607 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News