செய்திகள்
கொரோனா பாதிப்பு- ஜவுளிக்கடை ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த உத்தரவு
திருச்சியில் ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் பிரபல ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஜவுளிக்கடை கடையை 15 நாட்கள் மூடவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் பிரபல ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஜவுளிக்கடை கடையை 15 நாட்கள் மூடவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.