செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

Published On 2020-07-06 19:41 GMT   |   Update On 2020-07-06 19:41 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 26
செங்கல்பட்டு - 2,958
சென்னை - 24,052
கோவை - 525
கடலூர் - 378
தர்மபுரி - 76
திண்டுக்கல் - 371
ஈரோடு - 200
கள்ளக்குறிச்சி - 714
காஞ்சிபுரம் - 1,661
கன்னியாகுமரி - 373
கரூர் - 41
கிருஷ்ணகிரி - 124 
மதுரை - 3,199
நாகை - 182
நாமக்கல் - 22
நீலகிரி - 101
பெரம்பலூர் - 14
புதுக்கோட்டை - 238
ராமநாதபுரம் - 981
ராணிப்பேட்டை - 650
சேலம் - 870
சிவகங்கை - 340
தென்காசி - 211
தஞ்சாவூர் - 172
தேனி - 744
திருப்பத்தூர் - 186
திருவள்ளூர் - 1,666
திருவண்ணாமலை - 1,251
திருவாரூர் - 198
தூத்துக்குடி - 401
திருநெல்வேலி - 416
திருப்பூர் - 91
திருச்சி - 462
வேலூர் - 1,287
விழுப்புரம் - 607
விருதுநகர் - 528
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 205
உள்நாடு - 215
ரெயில் நிலைய கண்காணிப்பு - 97

மொத்தம் - 46,833



Tags:    

Similar News