செய்திகள்
கோப்பு படம்

ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ் - 60 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

Published On 2020-07-04 20:58 GMT   |   Update On 2020-07-04 20:58 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 280 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,450 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 214 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் - 439
செங்கல்பட்டு - 3,220
சென்னை - 41,309
கோவை - 275
கடலூர் - 856
தர்மபுரி - 50
திண்டுக்கல் - 315
ஈரோடு - 81
கள்ளக்குறிச்சி - 465
காஞ்சிபுரம் - 926
கன்னியாகுமரி - 221
கரூர் - 124
கிருஷ்ணகிரி - 67 
மதுரை - 994
நாகை - 106
நாமக்கல் - 90
நீலகிரி - 44
பெரம்பலூர் - 156
புதுக்கோட்டை - 79
ராமநாதபுரம் - 359
ராணிப்பேட்டை - 537
சேலம் - 337
சிவகங்கை - 161
தென்காசி - 207
தஞ்சாவூர் - 310
தேனி - 268
திருப்பத்தூர் - 87
திருவள்ளூர் - 2,895
திருவண்ணாமலை - 1,107
திருவாரூர் - 329
தூத்துக்குடி - 815
திருநெல்வேலி - 635
திருப்பூர் - 125
திருச்சி - 463
வேலூர் - 537
விழுப்புரம் - 604
விருதுநகர் - 346
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 206
உள்நாடு - 123
ரெயில் நிலைய கண்காணிப்பு - 324

மொத்தம் - 60,592
Tags:    

Similar News