செய்திகள்
கொரோனா வைரஸ்

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Published On 2020-07-03 11:08 GMT   |   Update On 2020-07-03 11:08 GMT
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சேலம்:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக சேலம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. 

சேலம் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,034 இருந்தது.

இந்நிலையில், சேலத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,134 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News