செய்திகள்
கோப்பு படம்

ஒரு நாளில் 3 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - 56 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

Published On 2020-07-02 22:44 GMT   |   Update On 2020-07-02 22:44 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேறு ஒரே நாளில் 3 ஆயிரத்து 95 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,321 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 3 ஆயிரத்து 95 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் - 425
செங்கல்பட்டு - 3,014
சென்னை - 38,947
கோவை - 231
கடலூர் - 775
தர்மபுரி - 39
திண்டுக்கல் - 300
ஈரோடு - 80
கள்ளக்குறிச்சி - 379
காஞ்சிபுரம் - 888
கன்னியாகுமரி - 165
கரூர் - 117
கிருஷ்ணகிரி - 43 
மதுரை - 887
நாகை - 100
நாமக்கல் - 87
நீலகிரி - 41
பெரம்பலூர் - 156
புதுக்கோட்டை - 73
ராமநாதபுரம் - 265
ராணிப்பேட்டை - 462
சேலம் - 288
சிவகங்கை - 96
தென்காசி - 204
தஞ்சாவூர் - 274
தேனி - 191
திருப்பத்தூர் - 55
திருவள்ளூர் - 2,648
திருவண்ணாமலை - 910
திருவாரூர் - 224
தூத்துக்குடி - 727
திருநெல்வேலி - 614
திருப்பூர் - 117
திருச்சி - 452
வேலூர் - 380
விழுப்புரம் - 582
விருதுநகர் - 249
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 198
உள்நாடு - 104
ரெயில் நிலைய கண்காணிப்பு - 234

மொத்தம் - 56,021

Tags:    

Similar News